28/03/2026
பழைய 'தோழர்களுக்கு' அல்வா... புதிய 'வரவுகளுக்கு' லட்டு! இபிஎஸ்-ஸின் பன்ச் பாலிடிக்ஸ்!
தமிழக அரசியல் களம் இப்போது சீட் ஒதுக்கீடு விவகாரத்தில் செம கலகலப்பாக இருக்கிறது. குறிப்பாக, திமுக கூட்டணியில் நடக்கும் "பங்கு பிரிப்பு" பஞ்சாயத்துகளைப் பார்த்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஒரு வழிப்போக்கரைப் போல நக்கலாக ஒரு கமெண்ட்டை தட்டிவிட்டுள்ளார்.
திமுக கூட்டணியில் 10 ஆண்டுகாலமாக 'உப்பு தின்ற' பழைய தோழமைக் கட்சிகளுக்கு, இந்த முறை ஒரு சீட் குறைவாகக் கொடுத்து "டயட்" இருக்கச் சொல்லியிருக்கிறார்களாம். அதே சமயம், நேற்று வந்த 'புது வரவு' கட்சிக்கு தாராளமாகத் தொகுதிகளை அள்ளி வழங்கி, "வெல்கம் ட்ரிங்க்" கொடுத்திருப்பதாக எடப்பாடியார் சுட்டிக்காட்டியுள்ளார். "பத்து வருஷமா கூடவே இருந்து 'செங்கொடி' தூக்கினவங்களுக்கு ஒரு சீட்டை குறைச்சு கையில் கொடுத்திருக்காங்க. பாவம், தோழர்கள் இப்போ 'அரிவாள் சுத்தியலை' விட அதிகமா யோசிக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்காங்க!" என எடப்பாடியார் பேசியுள்ளார்.
"கூட்டணிக்கு புதுசா வந்தவங்களுக்கு மட்டும் ராஜ உபசாரம்... கூடவே இருந்தவங்களுக்கு 'கட்' போட்டது என்ன நியாயம்?"
"கூட்டணி தர்மம்னா என்னன்னு தெரியுமா? கூடவே இருந்தவங்களுக்கு அல்வா கொடுத்துட்டு, புதுசா வந்தவங்களுக்கு லட்டு கொடுக்கிறதுதான் இப்போதைய திராவிட மாடல் போல!" -
திமுக தரப்போ, "வெற்றி வாய்ப்புதான் முக்கியம்" என சைலண்ட் மோடுக்கு சென்றுவிட்டது. ஆனால், எடப்பாடியாரோ, "நாங்கெல்லாம் கரெக்டா பிரிச்சு கொடுப்போம்ல" என்கிற ரேஞ்சுக்கு பழைய தோழர்களை உசுப்பி விட்டு, திமுக கூட்டணியில் ஒரு சின்ன 'சரவெடியை' பற்றவைத்துள்ளார்.
மொத்தத்தில், "பத்து வருஷம் பழகினாலும் புது மோகம்தான் ஜெயிக்கும்" என்கிற சினிமா வசனத்தை அரசியல் களத்தில் எடப்பாடியார் இப்போது ரீ-மேக் செய்து கொண்டிருக்கிறார்!