19/12/2025
ஒட்டறுத்தகுளம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதேச செயலகப் பிரிவில் மல்லாவிக்கு மிக அன்மையில் கானப்படும் கிராமம், இப் பெயருக்கான காரனம் பல சந்தர்ப்பங்களில் நகைச்சுவையாக கையாளப்பட்டாலும் இப் பெயர் பல வரலாற்று பின்னனிகளை கொன்டுள்ளது.
குறிப்பாக ஒட்டர் + அறுத்த குளம் என்ற பெயரே பேச்சு வழக்கில் ஒட்டறுத்தகுளமாக இன்று மருவி உள்ளது.
இதே போல ஒட்டங்குளம், ஒட்டன்கட்டுக்குளம். ஒட்டுக்குளம் ஆகிய பெயர்களும் இதே வரலாற்று பின்னனியையே கொண்டுள்ளது.
பழைய குளங்கள் மற்றும் அணைகள் அமைப்பதில் ஒட்டர் சமூகத்தினர் முக்கியப் பங்காற்றியுள்ளனர், இதனால் அவர்களின் சமூகப் பெயருடன் நீர்நிலைகளின் பெயர்கள் இணைந்திருக்க வாய்ப்புள்ளது.
ஒட்டர் (Oddar, Vodra, Odde, Bhovi, or Waddar) எனப்படுவோர் இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா பகுதிகளில் வாழுகின்ற தெலுங்கு பேசும் இனக்குழுவினர் ஆவார்.
ஒட்டர் சமூகம் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. அவை கல் ஒட்டர், மண் ஒட்டர், மரம் ஒட்டர், உப்புர ஒட்டர், சூரா மாரி ஒட்டர்கள், பெத்த போயர், ஒட்ராஜ்புத், சூரிய குல சத்திரியர், சந்திர குல சத்திரியர், போயர்.
இவர்கள் கல் உடைத்தல், கட்டிட வேலைகள், செங்கல் தயாரித்தல், சுண்ணாம்பு தயாரிக்கும் மூலங்கள் வெட்டுதல், அணைகள் கட்டுதல், போன்ற பணிகளை முக்கிய வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர்.
கோயில் தலங்கள் அதிகமாக உருவாகிக் கொண்டிருந்த காலகட்டத்தில் கல் ஒட்டர்கள் (போயர்) மிகவும் செழிப்போடு இருந்தார்கள்.... கோவில் செய்யப்படும் கல் வேலைகள் எல்லாம் இந்த சமூகத்தினரை செய்து.. வந்தனர். இதனால் மன்னர்கள் அதிக கொடை கொடுத்து வந்தனர்... பழனிக்கு வரும் பாதயாத்திரை பக்தர்களுக்கு சத்திரம் அமைத்து உணவளித்தனர்... இதுதான் உண்மையான வரலாறு.... கல் ஒட்டர்கள் ஒட்டன்சத்திரத்தின் சுற்று பகுதிகளில் இன்றும் வசித்து வருகிறார்கள்... நாய்க்கர் ஆட்சியில் படைத்தளபதிகளாக பணிபுரிந்தனர், ஒட்டன்சத்திரம் நகரம் முந்தைய மதுரை மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
எனவே இழத்து அரசர் காலத்தில் ஒட்டர்கள் குளங்கள் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டமையை இது எடுத்துக்காட்டுகிறது.
ஆய்வுகள் தொடரும்....
கனகராயனூர் மெஜஸ்ரி